Monday, June 16, 2008

அயணங்கள்

"ஸ்ரீ பாலா", எங்களின் இஷ்ட தெய்வம் .
அவளின் பெயர் தாங்கிய எங்கள் அன்பு பெயர்த்தி, இன்று காலையில் என்னிடம் வந்து, "என்ன தாத்தா,இன்று என்ன விசேஷம்" என்று கேட்டாள்.
நான், "இன்று விசேஷம் இருக்கட்டும், இன்று என்ன அயணம் தெரியுமா" என்று கேட்டேன்.
"அயணம் அப்படி என்றால் என்ன?" என்றாள். அயணம் என்றால் என்ன என்று சொல்ல தொடங்கினேன்.

பொதுவாகவே வருஷத்துக்கு இரண்டு அயணங்கள், ஆறு பருவங்கள் உண்டு. ஒன்று உத்ராயணம்; மாதங்களில் தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி முடிய இருக்கும். இரண்டாவது தக்ஷ்ணாயணம்; ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி முடிய இருக்கும். சிறப்பாக அயணங்களில் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகள் விசேஷமாக இருக்கும்" என்று சொல்லி முடித்தேன்.

இதை ஸ்ரீ ஜெயேந்திரர் 1985-ல் ஜனவரி மங்கை மாத இதழில் கூறியது.

No comments: